Sunday, November 29, 2009

யோகி aka Tsotsi!!!

யோகியான Tsotsi யைப் படிக்க இங்கே சுட்டவும் : http://www.tsotsi.com/english/index.php?m1=film

தமிழில் தரமான நல்ல கதைகளுக்குப் பஞ்சமில்லை. அவற்றைத் திறம்படப் படமாக்க தயாரிப்பளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தான் பஞ்சம். எல்லாம் வெற்றியின் மேல் இருக்கும் பயம். இங்கே வெற்றி எனப்படுவது முதலீடு செய்த பணத்திற்கு இலாபம் பார்ப்பது அல்லது image எனப்படும் புகழின் மாயப்பிடியைத் தக்க வைத்துக் கொள்வது!!!

இதில் இளிச்சவாயன்கள் யாரென்றால் நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்கள்!

பணம் தான் பிரச்னைன்னா தலை சிறந்த இயக்குனர்கள்னு பட்டம் வாங்குனவங்க எல்லாம் கலைக்காக வருஷத்துக்கு நூறு குறும்படங்களையோ குறைந்த Budget படங்களையோ எடுத்து வியாபாரம் பண்ணிப் பாருங்க. வேற்று மொழிப்படங்களோட கதையைத் தழுவி (எங்கள் பார்வையில் 'திருடி') படம் எடுக்கறீங்களே, அதே போல அவங்களோட வியாபார தந்திரத்தையும் (எ.கா., Paranoid Series) தழுவி அல்லது திருடியாவது தரமான திரைப்படங்களைக் கொடுத்து எங்களைத் தமிழ்த் திரைப்பட இரசிகர்களாய் பெருமை படச் செய்யுங்களேன்!

இதுவரை கண்டெடுத்த கண்கள்!

'கண்கள் இரண்டொழிய வேறில்லை' என நினைத்து
ஏமாந்து இருந்தேன்.

கனவுகள் கொடுத்து
என் மனக்கண்ணைத் திறந்து வைத்தாய்,

அந்தக் கனவுகளை அழிக்கும்
சூத்திரம் கற்றுக் கொடுத்து
அறிவுக்கண்ணையும் திறந்து வைத்தாய்!

இன்னமும் எத்தனை கண்கள் உள்ளதென
ஆச்சர்யப்பட்டு அதிர்ச்சியில் கிடக்கிறேன் நான்!

இன்றும் கழிகிறது

நேற்றைய நிகழ்வுகளையும்
நாளைய கனவுகளையும்
மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக் களைத்துப் போகிறேன்.

மதியவேளைப் பட்டினியில்
புரண்டு படுத்துக் கண்மூடும் போது சொல்லிக்கொள்கிறேன்
'நாளை நலமாய் இருக்கும்' என்று!

Thursday, November 19, 2009

WOW!!!

இந்தத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் ஆறாம் அறிவு!!! தெளிவாய்ச் சொல்லப் போனால், இது கணினியை நம் உடலில், உயிரில் புகுத்தும் முயற்சி...

Tuesday, November 10, 2009

மகிழ்ச்சி

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- உன்னோடு சேர்ந்து சிரித்த போது
நான் உலகுக்குச் சொன்னது!

கனவுகளைத் துரத்தியவன்!!!

இதுவரையில்
என் கனவுகளையெல்லாம்
மலையுச்சிக்கு அழைத்துச்சென்று
கீழே தள்ளிக் கொன்று கொண்டிருந்தேன்!

நேற்று வந்த ஒரு கனவு
தள்ளிவிடும் தருணத்தில் தள்ளி நின்று
என்னை விழவைத்துவிட்டது
பள்ளத்தாக்கினுள்!

இன்னமும் சாகாமல்
மீளாமல்
உயிர்பிழைத்துக் கொண்டிருக்கின்றேன்
என் இன்னபிற கனவுகள் விழுந்து இறந்த
பள்ளத்தில்!