யாரோ கொடுத்த ஒரு பிடிக் களிமண்ணை
ஆசையோடு வாங்கி - அதில்
தனக்குப் பிடித்த பொம்மை ஒன்றை
தானே செய்து
தனக்கே தனக்கென்று வைத்துக் கொண்டாள்
அந்தக் குழந்தை...
அதனோடு விளையாடினாள்,
அதனோடு பேசினாள்,
அதனோடு கொஞ்சினாள்,
தன் படுக்கையில் அருகில் வைத்துப் படுத்துக்கொண்டாள்,
நெடு நாட்கள்
களிமண்ணை பொம்மையாக்கின கர்வம் கொண்டிருந்தாள்.
அவளே,
வளர்ந்து
மணம் முடித்த பின்
தன் கணவனைத் திட்டும் போது சொன்னாள் இப்படி -
"களிமண்ணு மண்ட! இத ஏந்தலைல கட்டிட்டாங்க..."
என்ன சொல்ல,
களிமண்ணை பொம்மையாக்கும் கலை மறந்து விட்டாள் என்க!
Friday, February 17, 2012
Subscribe to:
Posts (Atom)