Friday, June 27, 2008

தாத்தா

இனிதாய் முகம் மலர்ந்து சிரிக்கின்றார்.
புளியம்பட்டி போய் வருகிறேன் என்கிறார்.
திருப்பூர் வரை போக வேண்டும் என்கிறார்.
செல்பேசியில் அழைத்தவர் சும்மா கூப்பிட்டேன் என்கிறார்.
நலம் விசாரிக்கிறார்.
வரும் வரை வீட்டைப்பார்த்துக் கொள்ளச் சொன்னவர்
திரும்பாத இடம் சென்றார்.
அவர் சொன்ன செய்திகள் நூறு.