ஆசைகள் அனைத்தும் மறந்து கிடந்தேன்
சில நொடிகள்...
மூடிய விழிகளின் முன்னே
நட்சத்திரங்கள் இல்லாத வானம் விரிந்தது
அதில் துள்ளிக் குதித்து
மண்டியிட்டு
பின் படுத்துக் கொண்டு
அத்தனை வானத்தையும்
இழுத்துப் போர்த்தி
அந்த வெதுவெதுப்பில்
கண் அயர்ந்தேன் சில நொடியில்!
பின் இருளென்னும் சூனியத்தில்
மிதந்திருந்தேன் தனிமையில்!
Sunday, April 11, 2010
வீடு தொலைத்த உயிர்
மனிதப் பிறவியாய்ப் புரண்டு
உழன்று கிடக்கும்
விந்தை ஏன்?
இந்த மாயை ஏன்?
என் மரணத்தின் விடை அறியாமல்
இதே கேள்வியைக் கேட்டுச் சலிக்கிறேன் என்றும்!
உழன்று கிடக்கும்
விந்தை ஏன்?
இந்த மாயை ஏன்?
என் மரணத்தின் விடை அறியாமல்
இதே கேள்வியைக் கேட்டுச் சலிக்கிறேன் என்றும்!
Subscribe to:
Posts (Atom)