Saturday, September 28, 2013

இறைவா உன்னிடம் இறைஞ்சுகிறேன்...

கலங்காத மனம்,
அனைவரிடமும் அன்பு,
தடங்கல் இல்லாத எண்ணம்,
தெளிவான சிந்தை,
உன் நல்ல படைப்புகளை நுகரும் புலன்கள்,
நேர்மை, பக்தி, கருணை
எல்லாம் அருள வேண்டுகிறேன் இறைவா
என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு!

என்னைப் பற்றித்தான்
எந்தக் கவலையும் இல்லையே
உனக்கு!