மனம் மகிழ்ந்து உலவும்
தெருவின் வழியே செல்லும்போது
வியந்து வியந்து கேட்டுக்கொள்வதுண்டு -
பட்டாம்பூச்சிகள் ஏன்
செல்போன் பேசிக்கொண்டே
பறப்பதில்லை?
Thursday, August 19, 2010
Wednesday, August 18, 2010
மழை எப்போது அழகாகின்றது?
மழையில் நடப்பதோர் வரம்!
'மழை எப்போது அழகாகின்றது?' - என்று
மனதோடு அலசிக்கொண்டே நடப்பது அனுபவம்!
மழை அழகு,
நனைந்து சிலிர்த்து நிற்கும்
மரங்களை மீண்டும் மீண்டும்
நனைக்கும் போது!
மழை அழகு,
தேங்கி நிற்கும் நீரில் மிதக்கும்
கத்திக்கப்பலில் துளித்துளியாய் ஏறி
மிதக்கும் போது!
மழை அழகு,
காற்றைக் கொண்டு
என் குடையை விசிறியெறிந்து
என்னை நனைக்கும் போது!
மழை அழகு,
பள்ளிச் சிறுமிகளின்
மழைக்கோட்டில் விழுந்து சறுக்கிச் சென்று
அவர்களின் கை நனைக்கும் போது!
மழை அழகு,
சாலையோர மலர்களின்
நறுமணத்தைக் களவாடி
துளிகளோடு காற்றில் தூவும் போது!
....
'மழை எப்போது அழகாகின்றது?' - என்று
மனதோடு அலசிக்கொண்டே நடப்பது அனுபவம்!
மழை அழகு,
நனைந்து சிலிர்த்து நிற்கும்
மரங்களை மீண்டும் மீண்டும்
நனைக்கும் போது!
மழை அழகு,
தேங்கி நிற்கும் நீரில் மிதக்கும்
கத்திக்கப்பலில் துளித்துளியாய் ஏறி
மிதக்கும் போது!
மழை அழகு,
காற்றைக் கொண்டு
என் குடையை விசிறியெறிந்து
என்னை நனைக்கும் போது!
மழை அழகு,
பள்ளிச் சிறுமிகளின்
மழைக்கோட்டில் விழுந்து சறுக்கிச் சென்று
அவர்களின் கை நனைக்கும் போது!
மழை அழகு,
சாலையோர மலர்களின்
நறுமணத்தைக் களவாடி
துளிகளோடு காற்றில் தூவும் போது!
....
Thursday, August 12, 2010
நிலவோடு பயணம்
நின்றால் நிற்கும்
நடந்தால் பின்தொடரும்
நிலவைப் போன்ற
உன் நினைவுகளோடு
பயணிக்கிறேன் கண்ணே,
ஒரு சிறுவனை போல்!
நடந்தால் பின்தொடரும்
நிலவைப் போன்ற
உன் நினைவுகளோடு
பயணிக்கிறேன் கண்ணே,
ஒரு சிறுவனை போல்!
Subscribe to:
Posts (Atom)