Saturday, November 2, 2013

இறைவனடி சேர்ந்தார் மாமா

காலையில் அம்மாவிடம் இருந்து அவசர அழைப்பு
ரமேஷ் மாமா காலைல வாந்தி எடுத்திருக்காரு
அப்படியே போய்ட்டாரு.
-சரியா கேக்கல,
இறந்துட்டார்டா.
...
...
ஹலோ, கேக்குதா?
...
...

நோய்ல படுத்த ஒடம்பு
நேரமாக்க வேண்டாம்னு
நாங்க வர்றதுக்குள்ள
இருக்கிறவங்கள வச்சு மதியம் ஒரு மணிக்கு எடுத்திட்டாங்க
மாலை அப்பா கொடுத்த தகவல்.
சே,
செத்தாலும் பண்டிகை அன்னிக்கு சாகக் கூடாது.

இருபது வருடங்களாக அவர் பட்ட வேதனை
இன்றோடு முடிந்தது
மாமா கேட்ட சாவு
ஒரு வழியாக இன்று வந்து சேர்ந்தது
என்னிடம் கண்ணீர் இல்லை,
மனதில் சோகம் இல்லை,
லேசாக ஏதோ ஒரு பாரம்.
தாத்தாவை நினைத்துக் கொண்டேன்.
டாக்டர் ஹாரூன் பிள்ளைக்குத் தகவல் சொல்லி
ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினேன்.


http://kirpalwonders.blogspot.com/2008/06/blog-post.html

Saturday, September 28, 2013

இறைவா உன்னிடம் இறைஞ்சுகிறேன்...

கலங்காத மனம்,
அனைவரிடமும் அன்பு,
தடங்கல் இல்லாத எண்ணம்,
தெளிவான சிந்தை,
உன் நல்ல படைப்புகளை நுகரும் புலன்கள்,
நேர்மை, பக்தி, கருணை
எல்லாம் அருள வேண்டுகிறேன் இறைவா
என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு!

என்னைப் பற்றித்தான்
எந்தக் கவலையும் இல்லையே
உனக்கு!