Wednesday, May 19, 2010

மழைக்காற்றில் பட்டாம்பூச்சி...

பட்டாம்பூச்சி தன் சிறகால்
மெலிதாய் என் முகம் அறைந்து சென்றது
மழைக்காற்றில் சிறகடித்து
என் முகம் அறைந்த அவள் துப்பட்டா...

சிந்தும் அன்பு மழை

நடு இரவைத் தாண்டி வானில் பேய் இடி ...
அய்யோ! அவள் பயந்து போவாளே
என்று பதறிப்போய் அழைத்தேன்
செல்போனில் சிந்தியது அன்பு மழை!