Wednesday, January 30, 2019

ஆசைக்கனவுகள்

நாட்கள் நகர நகர
கனவுகளின் சுமையைத்
தாங்க முடியவில்லை!


என் சின்னஞ்சிறு
ஆசைகளில் பிறந்த கனவுகளைத்
தூக்கி எறியவும் மனமில்லை!


கனவுகள் வளர்ந்து வளர்ந்து
உடலின் ஒரு பாகம் போல்
ஒட்டிக் கொண்டன!


நிறைவேறாத கனவுகள்,
பெருகிப் பெருகி
நினைவுலகில் வழிந்து படிந்துவிட்டன!


சுயநலம் மேவிய கனவுகள் என்னை,
அவள் இல்லாத அவளும்,
அவர்கள் இல்லாத அவர்களும்
அவை இல்லாத அவைகளும்
உலவுகின்ற உலகில்,
தள்ளிவிட்டன!


கனவு வெளியின்
நினைவு விட்டத்தில்
உயிர்,
பலமுறை தூக்கிட்டுக் கொண்டது!


போதும்!


இந்த உடலை விட்டு விடும் நாளொன்றில்,
மெல்ல மெல்ல
தானே கரைந்து மறைந்துவிடும்
என் ஆசைக்கனவுகள்!



No comments: