Wednesday, March 7, 2012

புதிய போராட்டம்...

மன உறுதி கொள்,
புத்தியைக் கூர்மையாக்கு,
பார்வையைத் தெளிவாக்கு,
விரல்களை ஆயுதமாக்கு,
ஒவ்வொரு நொடியையும் உற்று கவனி,
ஒரு மனதாக்கு,
இறைவனைத் துணைக்குச் சேர்,
நம்பிக்கை வை,
தோல்வியை நினைத்து வருந்தாதே,
வென்றால் நீ இலட்சத்தில் ஒருவன்,
குறுக்கு வழியை எண்ணாதே,
"Payment Option" வரை சென்று விட்டால்
வென்று விடலாம்
சொல்ல மறந்து விட்டேன்,
தத்கால் இரயில் முன்பதிவுக்கு அடையாள அட்டை அவசியம்
ஏதாவது ஒரு அடையாள அட்டை எண்ணை
முன்கூட்டியே 8 மணிக்கு முன்னால் எடுத்து வைத்துக் கொள்!

No comments: