Wednesday, March 19, 2008

நிரைநேர் - மனது; நேர்நிரை - காகிதம்

தென்கிழக்கில் எழும்பி
வடமேற்கில் திரும்பி
கிழக்கு..
வடக்கு..
மேற்கு..
என்றவாறு திசைதோறும் சுற்றித் திரிந்து,
ஓடும் வாகனங்களைப் பின்னால் துரத்தி ஓடி,
அலைந்து, நெளிந்து, சுருண்டு,
காற்றில் மிதந்து,
சாலையில் சீறிவரும்
பேருந்தின் சக்கரங்களின் இடையில் பாய்ந்து,
அடியில் பதுங்கி,
சக்கரத்தில் சிக்கிச் சாகாமல்
பின்வழியே வெளியேறி
செருக்குடன் பறந்து வரும்!
பின்னால் வரும் இருசக்கர வாகனம்
தன் முன்சக்கரத்தில் பிடித்திழுத்து
சாலையின் மேல் சாத்தும்!
சில நொடிகள் திடுக்கிட்டு அசையாதிருந்து
மீண்டும்
தென்கிழக்கில் எழும்பி,
வடமேற்கில் திரும்பி...

2 comments:

RaGhaV said...

Fantastic..!

sen said...

ah very good da...trafficla porranthu vallanthingala naama...
correcta sollitapa....very nice