சொரி பிடித்து
கேட்பாரற்றுத் திரியும்
தெருநாய்களைக் கண்டு
இரக்கம் கொள்கிறோம்,
தனியாக மாட்டிக்கொண்ட
பூனைக்குட்டியை
அவை கடித்துக் குதறும் போது?
நாய்களிடம் மாட்டி
இறந்து போன
பூனைக்குட்டிகளைக் கண்டு
இரக்கம் கொள்கிறோம்,
சிறு குருவியைப்
பிடித்துப் பிய்த்து
அவை தின்னும் போது?
எளியவரைத்
துன்புறுத்தாது
அன்பு செய்தல் அறமாம்!
இரக்கம் காட்டுவதையும்
தண்டிப்பதையும்
கடவுள் பார்த்துக் கொள்வார்!
No comments:
Post a Comment