வாயை அகலத் திறந்து
நாக்கை மடக்கி நக்கிப் பார்த்தான் பொடியன்...
நறுமணம் சுமந்து வந்த காற்றில்
திராட்சை ரசச் சுவை ஏன் இல்லாமல் போனது?
மீண்டும்
நாசி நிறைய நறுமணத்தை நிரப்பிக் கொண்டு
உண்ணாமல் ஊர் சுற்ற ஓடிப் போனான்.
அவன் பின்னால் துரத்தி ஓடிப் போனது திராட்சைத் தோட்டத்துக் காற்று...
No comments:
Post a Comment