இதமான தை!
இம்மண்ணில் பிறந்த உயிர்கள் உண்ண
அறுவடை தந்த தை!
பசிப்பிணி நீங்கிய தை!
உழவைப் போற்றிய தை!
வளங்கள் சேர்த்த தை!
உளங்கள் உவந்த தை!
ஒவ்வொரு ஆண்டும் பிறப்பாள்,
புது வழிகள் திறப்பாள்...
இன்பம்,
புகழ்,
செல்வம்,
ஞானம்,
பண்பு,
அறம் சிறந்து
பொங்கட்டும் நம் வாழ்வில்...
No comments:
Post a Comment